×

வாரணாசியில் வரும் 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் மோடி: பாஜ, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலம்

வாரணாசி: நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உ.பி.யில் வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடக்கிறது. வாரணாசியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இங்கு நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வரும் 14ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

உ.பி.யின் புனித நகரமான வாரணாசியின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். வரும் 14ம் தேதியிலும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மாலை அணிவிக்க உள்ளார். முன்னதாக 13ம் தேதி மோடி வாரணாசி வரவுள்ளார்.

அதே நாளிலும் அவரது ’ரோடு ஷோ’ வாரணாசியில் நடைபெற உள்ளது. பிரதமர் தனது வேட்பு மனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட கலெக்டரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் உள்ளார். வாரணாசியுடன் சேர்த்து உ.பி.யின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் 3வது நாளான ஜூன் 4ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

The post வாரணாசியில் வரும் 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் மோடி: பாஜ, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Varanasi ,BJP ,eastern UP ,PM Modi ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி...